லண்டன்:சாராயத்தால் ஏற்படும் பாதிப்பை விட உடல் பருமனால் கல்லீரல் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.மது அதிகமாக அருந்தினால் கல்லீரல் பாதிக்கும் என எச்சரிக்கப்படுகிறது. ஆனால், உடல் பருமன் அதிகரித்தாலும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை பிரிட்டன் மருத்துவ அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் பருமனால் நீரிழிவு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், மலட்டுத் தன்மை, புற்றுநோய், மூட்டுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது வாடிக்கை. ஆனால், தற்போது கல்லீரலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பிரிட்டன் மருத்துவ ஆராய்ச்சியாளர் கிறிஸ்டோபர் ஹாவ்கி தெரிவித்துள்ளார்."கல்லீரலில் திசுக்கள் அழிந்து ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு கடைசியில் மரணத்தை ஏற்படுத்துகிறது இந்த உடல் பருமன்' என எச்சரிக்கிறார் கிறிஸ்டோபர்.
| வாசகர் கருத்து |