Load Image
Advertisement

ரகசிய ஓட்டு என்று தண்டோரா போட தேர்தல் அதிகாரிக்கு தரூர் கோரிக்கை

வரும் 17-ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடக்கிறது. மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் மோதுகிறார்கள். நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை; நடுநிலை வகிப்போம் என சோனியா குடும்பம் சொல்லி விட்டது. கார்கே பழம் பெரும் தலைவர் என்பதால், அவர் வெற்றி பெற வேண்டும் என்று சோனியா குடும்பம் விரும்பும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் நம்புகிறார்கள். சசி தரூர் இதை ஓப்பனாக சொல்லி காட்டுகிறார். “பல தலைவர்கள் தமது தொண்டர்களை கார்கேக்கு ஓட்டு போட சொல்லி இருக்கிறார்கள். நிறைய தொண்டர்கள் எனக்கு ஓட்டு போட விரும்புகிறார்கள். தலைவர்களின் கட்டளையை மீறி பேச மாட்டார்கள். என்றாலும் எனக்கு தான் ஓட்டு போடுவார்கள்” என்றார். ”பொது தேர்தலை போல இதிலும் ரகசிய ஓட்டு தான். யாருக்கு யார் ஓட்டு போட்டனர் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இதை கட்சியின் தேர்தல் அதிகாரி பரவலாக விளம்பரப்படுத்தினால், எனக்கு அதிக ஓட்டுகள் விழும்” என்றும் சசி தரூர் சொன்னார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement