Load Image
Advertisement

ஜமாத்திடம் அனுமதி வாங்கினால்தான் வாடகைக்கு வீடு கிடைக்கும்

கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து, கோவையில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்கும் நோக்கத்துடன், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத நல்லிணக்க கூட்டம் நடந்தது. கோயில் அர்ச்சகர்கள், கோட்டைமேடு சின்ன பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல், கேரளா முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். பயங்கரவாதத்திற்கு இடம் தர மாட்டோம் என ஜமாத் நிர்வாகிகள் உறுதி அளித்தனர். கோட்டைமேடில் புதிதாக குடி வருபவர்களின் பின்னணி தெரியாமல் வீடு வாடகைக்கு கொடுப்பதை கட்டுப்படுத்தும் ஜமாத் முடிவு செய்துள்ளது. முன் பின் அறிமுகம் இல்லாதவருக்கு வீடு வாடகைக்கு தரக்கூடாது. கட்டாயமாக ஜமாத்தில் இருந்து கடிதம் வாங்கி வந்தால் மட்டுமே வாடகைக்கு வீடு தர வேண்டும் என, முடிவு செய்யப்பட்டுள்ள ஜமாத் நிர்வாகிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement