Load Image
Advertisement

கடுப்பான திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளி செய்தன. மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்திப் சிங் புரி விளக்கம் அளித்தார். கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் 102 சதவீதம் உயர்ந்த போதும், பெட்ரோல் விலையில் 18.95 சதவீதம், டீசல் விலையில் 26.50 சதவீதம் மட்டுமே உயர்த்தினோம். கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் பெட்ரோல் விலையில் 13 ரூபாய், டீசல் விலையில் 16 ரூபாய் குறைந்தது. பல மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்ததால் இன்னும் விலை குறைந்தது. ஆனால் தமிழகம், மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய பாஜ ஆட்சி இல்லாத 6 மாநிலங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. இங்கே அமளி செய்யும் சில கட்சிகளின் எம்பிக்கள் வாட் வரியை குறைக்கும்படி அவர்களது மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என புரி கூறினார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement