Load Image
Advertisement

EB எண், ஆதார் இணைப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து வக்கீல் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார். பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் வக்கீல் வாதிடும்போது, மின் இணைப்பு எண்ணை வீட்டு உரிமையாளர் ஆதார் எண்ணுடன் இணைத்தால் மட்டும் அவருக்கு மானியம் கிடைக்கும். வாடகைக்கு குடியிருப்போருக்கு கிடைக்காது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெறாமல் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். அரசு வக்கீல் வாதிடும்போது, ஆதார் இணைப்பதற்கான அனைத்து சட்ட ரீதியான உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளது. மானியத்தை வாடகைதாரர், உரிமையாளர் யார் பெறுவது என்பது அவர்களுக்கு இடையிலான பிரச்னை என்று எடுத்துரைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement