Load Image
Advertisement

கிராண்ட் மாஸ்டர் பிரனேஷ்க்கு சொந்த ஊரில் பாராட்டு

சுவீடனில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் 29 நாடுகளை சேர்ந்த 136 வீரர்கள் பங்கேற்றனர். 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் பிரனேஷ் 8 புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். இந்த அந்தஸ்து பெற்ற 79வது இந்திய வீரர் பிரனேஷ், தமிழகத்தில் 28வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். பிரனேசுக்கு இப்போது 16 வயது ஆகிறது. 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். அவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அழகாபுரி. மகுடம் சூடி சொந்த ஊர் வந்த வீரரை மக்கள், ஆர்வலர்கள், அவரது பள்ளி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement