Load Image
Advertisement

சென்னை புத்தக கண்காட்சியில் வித்தியாசமான ஒரு அரங்கு

சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. வரும் 22-ந்தேதி வரை நடக்கவுள்ள இந்த கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா அரங்குகளிலும் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். ஒரே ஒரு அரங்கில் மட்டும் புத்தகங்கள் நன்கொடையாக பெறப்படுகிறது. அது சிறைத்துறையின் அரங்கு. எண்: 286. சிறையில் உள்ள நூலகங்களுக்கு புதிது புதிதாக புத்தகங்கள் கிடைக்க வேண்டும்; அதைப்படித்து கைதிகள் பயன்பெற வேண்டும் என்பதுதான் இந்த அரங்கின் நோக்கம் என சிறைத்துறை டிஐஜி முருகேசன் கூறினார். முதல் நாளில் 60 புத்தகங்கள் நன்கொடையாக வரப்பெற்றன. அடுத்த நாளை நூறை தாண்டியது. அடுத்தடுத்த நாட்களில் அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள் நன்கொடையாக வருகின்றன. அப்துல் கலாம், விவேகானந்தர், அம்பேத்கர், அன்னை தெரசா, அண்ணாதுரை போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களும், தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய நூல்களும் அதிகமே வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement