Load Image
Advertisement

திருடிய வீட்டில் போதையில் மட்டையாகிய திருடன்

பொருட்களை திருட்டி மூட்டை கட்டிவிட்டு பெட்ரூமில் குறட்டை காரைக்குடி அருகே பர்மா காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது பூர்வீக வீடு நடுவிக்கோட்டையில் உள்ளது. வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அருகில் வசிப்பவர்கள் வெங்கடேசனுக்கு தகவல் கூறினர். அவர் வந்து பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நாச்சியாபுரம் போலீசில் புகார் கூறினார். கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அதே ஊரை சேர்ந்த திருடன், சுதந்திர திருநாதன், பெட்ரூமில் குறட்டை விட்டு அசந்து தூங்கி கொண்டிருந்தார். காதில் மாட்டியிருந்த இயர்போனில் பாடல்கள் ஓடிக்கொண்டு இருந்தன. வீட்டில் இருந்த பொருட்களை திருடி மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, மது போதையில் மட்டையாகி இருந்தது புரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement