Load Image
Advertisement

வயதான தம்பதியை கொன்று 10 பவுன் நகைகள் கொள்ளை

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி முந்திரிதோப்பு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். வயது 92. மனைவி ஜானகிக்கு வயது 82. 3 மகன்கள், 2 மகள்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனியாக செட்டில் ஆகிவிட்டனர். ரயில்வேயில் கேங்மேனாக வேலை செய்து ஓய்வு பெற்ற சகாதேவன், மனைவியுடன் தோப்பு வீட்டில் வசித்து வந்தார். வியாழனன்று சகாதேவன், வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மனைவியை காணவில்லை. மாமல்லபுரம் போலீசார் தேடினர். வெள்ளியன்று காலை, முந்திரி தோப்புக்குள் ஜானகி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போயிருந்தன. செயின், கம்மல், மூக்குத்தி என 10 பவுன் நகை போட்டிருந்ததாக அவரது பிள்ளைகள் கூறினர். கொள்ளை கும்பல் தம்பதியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர். கொலையாளிகளை தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement