Load Image
Advertisement

ஆன்லைனில் குடிநீர் வரி கார்டு முறை இனி இல்லை.. ஏப்ரல் முதல் ஆன்லைனில் வரி செலுத்தலாம்

சென்னை குடிநீர் வாரியம் நுகர்வோர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை வழங்குகிறது. குடிநீர் வாரிய அலுவலகத்தில் அட்டையை காட்டி வரி செலுத்துகின்றனர். மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ஆன்லைனில் வரி செலுத்தும் வசதியை குடிநீர் வடிகால் வாரியம் ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. கிரெடிட், டெடிட் கார்டுகள் மூலமும், UPI, QR கோடு பயன்படுத்தியும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி செலுத்தலாம். அதற்கான ரசீதும் கிடைக்கும். வரி நிலுவை தொகையையும் தெரிந்து கொள்ளலாம். இனி, புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்பட மாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது என்று குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement