Load Image
Advertisement

அதிகாரிகளுக்கு கலெக்டர் சங்கீதா டோஸ் | Madurai | Vadipatti | KulasekaranKottai

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி முதல் குலசேகரன்கோட்டை வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைக்கும் பணி ரூ.1.10 கோடி செலவில் நடக்கிறது. சாலை தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதாக கலெக்டர் சங்கீதாவிடம் அதிமுக கவுன்சிலர்கள் புகார் கூறினர். ஆய்வுப்பணிக்காக குலசேகரன் கோட்டைக்கு சென்ற கலெக்டர் சங்கீதா, ஒரு இடத்தில் காரை நிறுத்தி சாலையை ஆய்வு செய்தார். அதிகாரிகளை பார்த்து, என்னங்க இது ரோடா, என்னோட காரே உள்ளே போயிடும் போல என்றார். ரோடு போட்டா ஒழுங்கா போடுங்க; இல்லாட்டி போடாதீங்க எனவும் அதிகாரிகளிடம் சொன்னார். பிறகு, தனது பாதுகாவலரை அழைத்து ரோட்ட பூரா போட்டோ எடுங்க என சொல்லிவிட்டு காரில் புறப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement