பெங்களூரு: பள்ளி மாணவியரிடம் சில்மிஷம் செய்த, பள்ளி துணை முதல்வருக்கு பொது மக்களும், கன்னட அமைப்பினரும் அடி, உதை கொடுத்தனர். பெங்களூருவில் ஒயிட்பீல்டில், ஹோலி கிராஸ் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் துணை முதல்வராக பிலிப் பணியாற்றி வருகிறார். இவர், மாணவியரிடம் சில்மிஷம் செய்து வந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், ஜெய் கர்நாடகா கன்னட அமைப்பினருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளி துணை முதல்வர் பிலிப், அவர்களிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, கன்னட அமைப்பினர் சிலர், பிலிப்பை தாக்கினர். பள்ளியில் இருந்த மேஜை, நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. தகவலறிந்த வந்த போலீசார், கன்னட அமைப்பினரையும் பெற்றோர்களையும் சமாதானப்படுத்தினர். பிலிப் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE