ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூரில் உள்ள் தனியார் செல்போன் தொழிற்சாலையில் ரோபோ தாக்கி இளம்பெண் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த டி. புதூரைச் சேர்ந்தவர் அம்பிகா (22). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் செல்போன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று தொழிற்சாலையில் உள்ள ரோபோ பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார், அப்போது எதிர்பாராத விதமாக ரோபோ ஒன்று இளம் பெண் அம்பிகாவை தாக்கியது. இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE