ஆதிலா கொலையில் மலேசியா போலீஸ் : சென்னையில் தனிப்படை முகாம்

Added : நவ 19, 2010 | கருத்துகள் (1) | |
Advertisement
ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், குற்றவாளிகளை கைது செய்ய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு(24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை

ராமநாதபுரம் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த ராமநாதபுரம் பெண் ஆதிலாபானு கொலை வழக்கில், அவர் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், குற்றவாளிகளை கைது செய்ய அந்நாட்டு போலீசார் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் குப்பன்வலசையை சேர்ந்த முத்துச்சாமியை, சாத்தான்குளத்தை சேர்ந்த ஆதிலாபானு(24) காதலித்து திருமணம் செய்தார். மதம் மாறிய முத்துச்சாமி தனது பெயரை அகமது என மாற்றிக்கொண்டார். வேலைக்காக மலேசியா சென்ற முத்துச்சாமி, தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அழைத்து சென்றார். தாய் ஹம்சத் நிஷாவை பார்ப்பதற்காக ஆதிலாபானு அடிக்கடி இந்தியா வந்து சென்றார். ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள வீட்டிலிருந்த இவர், கடந்த நவ., 8ல் குழந்தைகளுடன் மாயமான நிலையில், மதுரை வாடிப்பட்டி அருகே கால்வாயில் உடல்கள் கிடந்தது.


இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவர் மூலம் கொலையாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. சாத்தான்குளத்தை சேர்ந்த சாகுல் என்பவர் இந்த சம்பவத்தில் தலைமையேற்றதும்,இவருக்கு உதவியாக ஜெயக்குமாரின் உறவினர் முனியசாமி, முகமது ஹர்ஷத், மணிகண்டன் ஈடுபட்டதும் தெரியவந்தது. குற்றவாளிகள் போலி பெயரில் மலேசியா தப்பிச்சென்றதும் உறுதிசெய்யப்பட்டது. இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்கும் நடவடிக்கையில் வாடிப்பட்டி, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் களமிறங்கினர். கொலை செய்யப்பட்ட மூவரும் மலேசிய குடியுரிமை பெற்றிருப்பதால், மலேசிய போலீசார் சாகுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக போலீசார் தெரிவித்தனர். முனியசாமி சென்னையில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
20-நவ-201011:09:00 IST Report Abuse
சில்லு வண்டு நம்ம நாட்டில் பாதி கொலைகார பயபுள்ளைகள் இப்படிதான் போலி பேரில் பாஸ்போர்ட் எடுத்து கொண்டு வெளி நாட்டில் ஓடி ஒதிங்கி விடுகிராணுக ;;;;;;;என்னம்மோ இவனுகளை பிடித்து;;;;;;;;;;;;;; நம்ம நாட்டில் கடுமையான தண்டனை கொடுக்க போறது மாறி இவனுகளை தேடிக்கொண்டு திருகிறீர்கள்;;;;;;;;;அப்படியே பிடித்தாலும் இவனுகளுக்கு வயிறு நிறைய சோறு போட்டு ஆயுள் தண்டனை கொடுப்பீர்கள்,இது தான் உங்கள் தண்டனையாக இருக்கும்;;;;;இதற்க்கு இவனுகளை பிடிக்காமல் இருப்பதே நல்லது;;;;;;;ஏன் நம்ம நாட்டில் கொலை செய்தவனுக்கு கடுமையான சட்டம் இதுவரை கொண்டு வரவில்லை;;;;இதே கொலையை அரபு நாட்டில் செய்து இருந்த்திருந்தால்;;;;;;;இந்த மூனு போரையும் நாடு ரோட்டில் வைத்து சுட்டு தள்ளி விடுவார்கள்;;;;;;போங்கையா நீங்களும் இந்த கொலை கார பயலுகளை தேடுதலும்;;;;;;
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X