இந்த செய்தியை கேட்க
சென்னை: மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலை, திருவள்ளுவராக சித்தரித்து, ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ம.நீ.மை., கட்சி தலைவரும், நடிகருமான கமல் இன்று (நவ.,7) 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ரசிகர்கள் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில், கமலை, திருவள்ளுவராக சித்தரித்து, அவரது ரசிகர்கள் சென்னையில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில்,'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்ற திருக்குறளை,'அகர முதல எழுத்தெல்லாம் உலக நாயகன் முதற்றே உலகு ' என மாற்றி எழுதியுள்ளனர். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, திருவள்ளுவர் விவகாரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல், திருவள்ளுவர் எல்லா மதத்தினரும் தனதாக்கி கொள்ள விரும்புகிறார்கள். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதுதான் உண்மை. அவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை'' என்றார்.
ஆனால் அவரது ரசிகர்கள் இதைக் காதில் போட்டுக்கொள்ளாமல், கமலையே திருவள்ளுவர் போல் சித்தரித்து போஸ்டர் ஒட்டி உள்ளனர்.