புதுடில்லி: "நாட்டிலுள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் இன்டர்நெட் இணைப்பு வசதி அடுத்தாண்டுக்குள் ஏற்படுத்தப்படும்' என, மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறினார். லோக்சபாவில் நேற்று அவர் பதிலளிக்கையில், ""அனைத்து தபால் நிலைய தலைமை அலுவலகங்கள், கிளை தபால் நிலையங்கள் முழுவதற்கும், 2012-13ம் ஆண்டுக்குள் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும். இதுவரை 22 ஆயிரத்து 360 தபால் நிலையங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE