வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆத்துார் : ''முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, 'பேனா' வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது? மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், முல்லைவாடியில், புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்று விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது. தி.மு.க., அரசின் செயல்பாடு சரியில்லாததால் தான் கலவரம், வன்முறை ஏற்பட்டுள்ளது. அக்கட்சி ஆட்சிக்கு வந்த, 15 மாதங்களில் அதிருப்தி ஏற்பட்டுஉள்ளது.
![]()
|
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை எனக்கூறும் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, 'பேனா' வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது. மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால், யாருக்கும் எந்த பயனும் இல்லை.கடவுள் மறுப்பு உள்ளிட்டவை, திராவிடத்தில் தான் உள்ளன. 'திராவிட மாடல்' என்பதே ஹிந்து மக்களுக்கு எதிராக செயல்படுவது தான். ஆன்மிக அரசியல் எதிர்ப்பு கொள்கை தான், தி.மு.க., வில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.