புதுடில்லி : தமிழகத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்கள் இருவர் , பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்
கலை, சமூக சேவை, பொது சேவை, அறிவியல் - தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு 2023 ஆண்டு தோறும்பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு பத்மவிருதுக்கு தேர்வு பெற்ற 106 பேரின் பெயர்கள் இன்று (ஜன.25) மத்திய அரசு வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இன பாம்புபிடி வீரர்கள் வடிவேல் கோபால், ம.சி. சடையன், மற்றும் சினிமா பாடகி வாணி ஜெயராம் உள்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
![]()
|
அதன் விவரம்:
பத்மவிபூஷன்: (6)
1) திலீப் மஹாலானபிஸ் (மருத்துவத்துறை )
2) பாலகிருஷ்ண தோஷி
3) ஸ்ரீ ஜாகீர் ஹூசேன்
4) ஸ்ரீனிவாஸ் வரதன்.
5)முலயாம்சிங் யாதவ்
6) எஸ்.எம். கிருஷ்ணா
****************
பத்மபூஷன்: (9)
1) குமார்மங்கலம் பிர்லா
2) தீபிகா தர்.
3) வாணி ஜெயராம்
4) எஸ்.எல். பைராப்பா
5) சுவாமி சின்ன ஜியார்.
6) சுமன் கல்யாண்பூர்
7) கபில் கபூர்.
8) சுதா மூர்த்தி.
9) கமலேஷ் பட்டேல்.
*****************
பத்மஸ்ரீ விருதுகள்: (91)
1) வடிவேல் கோபால்
2) ம.சி. சடையன்
3) எம்.எம். கீரவாணி
உள்பட 91 பேர் என 106 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.