குஜராத்தில்கொல்லப்பட்ட பெண்ணுக்கு லஷ்கர் தொடர்பு

Updated : ஜூலை 10, 2010 | Added : ஜூலை 05, 2010 | கருத்துகள் (84) | |
Advertisement
புதுடில்லி : குஜராத்தில், 2004ம் ஆண்டு நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இளம்பெண், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என்பது தெரியவந்துள்ளது. குஜராத்தில், 2004, ஜூன் 15ம் தேதி ஆமதாபாத்தின் புறநகரில் காரில் வந்த ஒரு கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டை நடந்தது. இச்சண்டையில் காரில் இருந்த இளம் பெண் இஷ்ரத் ஜகான், ஜாவீத் ஷேக் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்கள்
Isharat Jahan was Lashkar fidayeen, Headley tells NIA‎குஜராத்தில்கொல்லப்பட்ட பெண்ணுக்கு லஷ்கர் தொடர்பு

புதுடில்லி : குஜராத்தில், 2004ம் ஆண்டு நடந்த சண்டையில் கொல்லப்பட்ட இளம்பெண், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என்பது தெரியவந்துள்ளது.


குஜராத்தில், 2004, ஜூன் 15ம் தேதி ஆமதாபாத்தின் புறநகரில் காரில் வந்த ஒரு கும்பலுக்கும் போலீசாருக்கும் இடையே சண்டை நடந்தது. இச்சண்டையில் காரில் இருந்த இளம் பெண் இஷ்ரத் ஜகான், ஜாவீத் ஷேக் மற்றும் இரண்டு பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர்.இந்த நான்கு பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாக விசாரணையில் தெரிந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை இஷ்ரத்தின் தாய் மறுத்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வாசனை திரவிய நிறுவனத்தில் பணி புரிந்த தன்னுடைய பெண், சக ஊழியர்களுடன் வீடு திரும்பிய போது போலீசார் சுட்டுக் கொன்று விட்டதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.


இதற்கிடையே மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்த அமெரிக்க வாழ் பாகிஸ்தானியரான டேவிட் கோல்மேன் ஹெட்லி, கடந்த ஆண்டு சிகாகோவில் கைது செய்யப்பட்டான். இவனிடம் தற்போது தேசிய புலனாய்வு அதிகாரிகளும், சட்டத்துறையைச் சேர்ந்தவர்களும் அமெரிக்கா சென்று விசாரித்தனர்.குஜராத்தில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான், லஷ்கர்-இ-தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள் என, டேவிட் கோல்மேன் ஹெட்லி, இந்திய புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளான். இந்த வாக்குமூலத்தின் மூலம் நீண்ட கால புதிருக்கு விடை கிடைத்துள்ளதாக மத்திய புலனாய்வுத்துறையினர் நம்புகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (84)

09-ஜூலை-201008:09:26 IST Report Abuse
மோடி ..நான் திருந்திட்டேன்... தேவை இல்லாத வேலை. போயி புள்ளைகள படிக்க வைச்சி வாழ்க்கைல முன்னேற வழிய பாருங்கையா . தீவிரவாதம், மதவாதம் உங்களுக்கும் , உங்களுடைய தலைமுறைக்கும் எந்த விதத்திலயும் பயன் தராது. நல்ல கல்வியை கற்று நல்ல சமுதாயத்தை நாம் அனைவரும் உருவாககுவோம்.
Rate this:
Cancel
citizen - kppettai,இந்தியா
08-ஜூலை-201009:34:58 IST Report Abuse
citizen மத்திய அரசு எந்த ஒரு மீடியாக்களுக்கும் எந்த ஒரு தகவலையும் தரவில்லை என்கிறார்கள். அப்படியானால் ஏன் மீடியாக்கள் இதுபோல் செய்திகளை பரப்ப வேண்டும். இதில் ஏதோ மர்மம் உள்ளது.
Rate this:
Cancel
இந்தியன் - thanchavur,இந்தியா
08-ஜூலை-201008:59:37 IST Report Abuse
இந்தியன் இந்தியாவில்தனக்கு சாதகமானதை {நீதியை} விலைக்கொடுத்து வாங்கலாம் தங்களுக்கு தெரியாத விரைவில் {மோடி} பாசிசத்தை வெல்வோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X