பாக்.மீது படையெடுத்தால் : இந்தியா- அமெரிக்காவிற்கு கர்சாய் எச்சரிக்கை

Added : அக் 23, 2011 | கருத்துகள் (3) | |
Advertisement
காபூல்: பாகிஸ்தான் மீது அமெரிக்காவோ, இந்தியாவோ போரிட நேரிட்டால் பாகிஸ்தானுக்கு , ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானை தாக்க நினைத்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில

காபூல்: பாகிஸ்தான் மீது அமெரிக்காவோ, இந்தியாவோ போரிட நேரிட்டால் பாகிஸ்தானுக்கு , ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிக்கும். பாகிஸ்தானை தாக்க நினைத்தால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம் என ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில், ஹக்கானி குழுவினர் மீது அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாட்களுக்குமுன் பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஹக்கானி குழுவினரை ஒழிக்க, பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத்கர்சாய், காபூல் அதிபர் மாளிகையில், டி.வி. சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி, பாகிஸ்தான் எப்போதும் எங்களது நட்பு நாடு, தற்போது ஹக்கானி நெட்வொர்க் குறித்து பாகிஸ்தான், அமெரிக்கா இடையே ஆப்கான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக வைத்து அமெரிக்கா, பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதி மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்திவருவது சரியல்ல.இந்தியாவோ, அமெரிக்காவோ, யாராக இருந்தாலும், பாகிஸ்தான் மீது படை எடுத்தால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் செயல்படும். பாகி்ஸ்தான் மீது போர் தொடுக்க யார்நினைத்தாலும் அதை பார்த்து கொண்டு சும்மா இருக்கமாட்டோம். இவ்வாறு கர்சாய் கூறினார். கர்சாயின் இந்த பேட்டியால், அமெரிக்கா அதிர்ச்சியடைந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

Sri Nath - coimbatore,இந்தியா
25-அக்-201118:32:56 IST Report Abuse
Sri Nath இந்தியாவின் உதவிகளை பெற்று,இந்தியாவின் உப்பை தின்று, இந்தியாவிடம் பயிற்சிகளை பெற்று இந்தியாவியே தாக்குவண் என்கிறது நன்றி கெட்ட ஆப்கன், முதலில் இந்திய அன் நாட்டிற்கு செய்யும் உதவிகளை நிறுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Sri Nath - Riyadh,சவுதி அரேபியா
25-அக்-201109:03:02 IST Report Abuse
Sri Nath ஆப்கன் மட்டும் இல்லை, வர எந்த நாடும் பாகிஸ்தான் உடன் போரில் துணை நின்றால் அது எவளோ பெரிய நாடாக இருந்தாலும் அதையும் சேர்த்து இந்தியா அழிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவை பொறுத்தவரை நண்பனாக இருந்தால் நண்பன், எதிரியாக இருந்தால் எதிரி. ஜெய் ஹிந்த்................
Rate this:
Cancel
gayathri sampathkumar - Kanchipuram,இந்தியா
23-அக்-201112:13:43 IST Report Abuse
gayathri sampathkumar பேரிடர் காலங்களில் நாம் அளித்த மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் தரும் பரிசு. இந்தியர்களின் வரிப்பணம் வாழவைக்கிறது அவர்களை, ஆனால் அவர்களது உள் மனதில் இருக்கும் எண்ணம் இன்று வெளிப்பட்டிருகிறது. இந்தியா இதுமாதிரியான உதவிகளை அளிப்பதை விட்டு, இந்தியர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு, வாழ்வதரம் குறித்து ஆராய வேண்டும். ஜெய் ஹிந்த் !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X