எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?

Added : ஜன 17, 2012 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: "சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூர் வருகை ரத்து?

புதுடில்லி: "சல்மான் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை ராஜஸ்தான் மாநில மக்கள் விரும்பவில்லை. அவர் வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதுமில்லை' என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.


ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரது வருகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க வருவாரா என்பது குறித்து வாதபிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது, ருஷ்டியின் வருகை குறித்து மாநில மக்களின் உணர்வுகளை மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை. மாநில மக்கள் அவர் வருவதை விரும்பவில்லை. எந்த மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை விரும்பாது. மாநில உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவித்துவிட்டேன்' என்றார். இந்நிலையில், விழா அமைப்பாளர் சஞ்ஜோய் ராய் கூறுகையில், "ருஷ்டி பயண திட்டத்தில் மாறுதல் காரணமாக, வரும் 20ம் தேதி அவர் இந்தியா வரமாட்டார்' என்றார். இவ்விழா குறித்தான வலைதளத்திலும், நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே ருஷ்டி, இவ்விழாவில், 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் உரையாற்றுவதாக இருந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (2)

Arjun - Atlanta ,யூ.எஸ்.ஏ
18-ஜன-201206:53:05 IST Report Abuse
Arjun ......... எந்த மாநில அரசும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதை விரும்பாது..பெண்களே ஜாக்கிரதை..அதுவும் 12 -19 வயது பெண்கள் கவனமாக இருக்கவேண்டும்...இந்த ஆள் ஒரு .சிறு ..விரும்பி..நாம் தான் பெற்றோருடன் மிக கவனமாக இருக்க வேண்டும்..போகும் போது ஏதாவது சிறு பெண்ணை மணந்து கொண்டு செல்வது.வழக்கம்.
Rate this:
Sabi Zak - ferrer park,சிங்கப்பூர்
19-ஜன-201200:45:52 IST Report Abuse
Sabi Zakசரியாக சொன்னீர் அய்யா. பேஷ், பேஷ்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X