திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் ஈ.வெ.ரா. சிலையை சேதப்படுத்திய கும்பல், அரசு பஸ் மீதும் கல்வீசியது. கடையநல்லூரை அடுத்துள்ள மங்களாபுரத்தில் சமத்துவபுரம் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு ஒரு மணிக்கு 10 பேர் கொண்ட கும்பல் சமத்துவபுரத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள ஈ.வெ.ரா. சிலையை கல்வீசி தாக்கினர். இதில் சிலை சேதமடைந்தது. பின் அந்த கும்பல் அந்த வழியே சென்ற அரசு பஸ் மீதும் கல்வீசியது. இதில் பஸ்சின் முன் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்து கடையநல்லூர் போலீசார் அங்கு சென்றனர். நேற்று காலை சங்கரன்கோவில் டி.எஸ்.பி.,சண்முகம் விசாரணை நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE