இன்று தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய நகராக காட்சியளிக்கும் கோவை நகரம், ஒரு காலத்தில் கொங்கு மண்டலத்தின் ஒருபகுதியாக இருந்தது. வடக்கே தலைமலை என்றழைக்கப்படும் கோபிசெட்டிபாளையம், தெற்கே பழநி, கிழக்கே கொல்லிமலை, மேற்கே நீலகிரி என நான்கு பக்கமும் மலை சூழ்ந்த கொங்கு மண்டலத்தில் கோவையும் ஒருபகுதியாகும்.
கி.பி. 3 ம் நூற்றாண்டு முதல் 9ம் நூற்றாண்டு வரை கோவையை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை ஆண்டது கன்னடம் பேசும் கங்க மன்னர்கள். பின்னர் கொங்கு சோழர்களும், பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளும் கோவையை ஆட்சி செய்துள்ளனர்.
கோவைக்கு வடமேற்கே மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து 599 அடி உயரத்தில் அமைந்துள்ள மருதமலை முருகன் கோயில் மிக பிரசித்தி பெற்றது.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.