1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி ராமநாதபுர மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது. விருதுநகரின் முதல் மாவட்ட கலெக்டர் எல்.என். விஜயராகவன் ஐ.ஏ.எஸ்., விருதுநகர் மாவட்டத்தின் தலைமையிடம் விருதுநகராகும். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சிவகாசி, காரியாபட்டி, திருச்சுழி, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கியதாகும். அருப்புக்கோட்டை ரெவின்யூ டிவிஷனில் காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. ...
விருதுநகரில் இருந்து 45 கி.மீ தொலைவில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் அமைந்துள்ளது. வழக்கமான அணில்களை விட பெரியதாக, சாம்பல் நிறத்தில் இந்த அணில் இருக்கும். இந்த அரிய வகை அணில் இந்த சரணாலயத்தில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் பறக்கும் அணில், ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.