*கடவுளின் கருணையைப் பெற விரும்பினால் வாழ்வில் அன்பு வழியைத் தேர்ந்தெடுங்கள்.
* அறிவு என்னும் கதவு திறந்தால் மட்டுமே அறியாமை என்னும் திரை அகலும்.
*மக்கள் பொருளாசையால் கடவுளை வழிபடுகிறார்கள். அவரின் அருளுக்காக மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.
* உண்ணாமல் நோன்பு இருப்பதை விட, பசியால் வாடும் ஒருவருக்கு உணவு அளிப்பது சிறந்தது.
*தண்ணீர் குளிர்ச்சியை அதன் இயல்பாக கொண்டிருப்பது போல மனிதனுக்கு அன்பே இயற்கையானது.
-சாய்பாபா