* மனதை உற்சாகமாக வைத்திருங்கள். மகிழ்ச்சியான நிலையில் தான் பணியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.
* விழிப்புணர்வு இல்லாவிட்டால் வாழ்க்கை துன்பமயமாகி விடும். சிறு பணியையும் விழிப்புடன் செய்யுங்கள்.
* சிடுசிடுப்பு என்னும் முகமூடியை கழற்றி விட்டால் வாழ்க்கை இனிமையானதாக அமையும்.
* ஆன்மிகம் என்ற பெயரில் மூடத்தனத்திற்கு இடம் அளிப்பது கூடாது. அறிவுக்கு வேலை கொடுங்கள்.
* பிறர் செய்யும் நற்செயல்களை மனம் திறந்து பாராட்டுங்கள்.
-ஜக்கி வாசுதேவ்