* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.
* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக வாழ்க்கை.
* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி. உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.
* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.
* பிறர் உங்களை இம்சித்தால் கூட பழிக்குப் பழி வாங்கும் எண்ணம் வேண்டாம். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சிவானந்தர்