இல்லாத இடமே இல்லை
மே 13,2012,
17:05  IST
எழுத்தின் அளவு:

* மனத்தூய்மை, பொறுமை, அன்பு, நேர்மை ஆகிய குணங்களைக் கொண்டவனே நல்ல மனிதன்.
* கடவுளை சத்தியமாக நம்புபவன் வாழுமிடம் சொர்க்கமாகத் திகழும். விடாப்பிடியாக கடவுளைப் பற்றிக் கொண்டால், வெற்றி தேடி வரும்.
* ஒருபோதும் சோம்பித் திரியாதீர்கள். செய்யும் பணியில் முழுமையாக ஈடுபடுங்கள். சிரத்தையோடு கடமையாற்றுபவன் லட்சியத்தை நோக்கி முன்னேறுவான்.
* புத்திசாலிகள் அறியாமையில் தவிப்பவர்களைப் புறக்கணிக்கக் கூடாது. பிறரை வெறுப்பவன் அறிஞனாக முடியாது.
* கடவுள் இல்லாத இடமே இல்லை. எங்கும் அவர் நிறைந்திருக்கிறார். இந்த உண்மையை உணர்ந்து விட்டால் உலகம் உன்னை போற்றும்.
* விருப்பு, வெறுப்பு இரண்டும் நரகத்தின் வாசல்கள். சத்தியத்தின் வடிவமான கடவுள் விருப்பு வெறுப்பவற்றவராகத் திகழ்கிறார்.
* கடவுளைக் காண முதலில் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவரைத் தேடி அலைய வேண்டியதில்லை. அவரே உங்களுக்குள் காட்சி தருவார்.
-சாந்தானந்தர்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாந்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X