* முன் நேரத்தில் தூங்கி, அதிகாலையில் எழுவது வைராக்கிய வாழ்வுக்கு அவசியமான பழக்கம். * அறிவால் கடவுளை அறிய முடியாது. ஆழ்ந்த நம்பிக்கை, அனுபவம் இரண்டும் நம்மைக் கடவுளிடம் அழைத்துச் சென்று விடும். * சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும். * நமக்கு கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். * அன்பு ஒருபோதும் தோற்பதில்லை. பகையுணர்வோ, மனிதனை அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்று விடும். * கண்களை மூடிக் கொண்டு பிரார்த்திப்பதால், மனதை லட்சியத்தை நோக்கி குவிக்கச் செய்ய முடியும். * கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார். * அகிம்சையால் வெல்ல முடியாமல் போனால், அதற்குக் காரணம் நம் மனபலவீனமே ஆகும். - காந்திஜி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.