* அவசியமில்லாத பொருளை நமக்குத் தேவை என்று வைத்துக் கொண்டிருப்பது கூடாது. சொல்லப்போனால் அதுவும் ஒரு திருட்டு தான். * உலகத்திலுள்ள எல்லா சக்திகளையும்விட ஆன்மிக சக்தியே மிக பலம் கொண்டது. * உங்களிடம் பேசாதவர்களிடம் பேசுங்கள். வராதவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். கோபித்தவர்களைச் சமாதானப்படுத்துங்கள். விட்டுக்கொடுத்து வாழப் பழகுங்கள். * இன்றைய பொழுதை நாம் பார்த்துக் கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக் கொள்வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும். * என்ன தான் குழப்பம் நேர்ந்தாலும் பொய்மை ஒருநாள் மறைந்துபோகும். ஒருநாள் மெய்மை மேலே உயர்ந்து நின்று தர்மத்தை நிலைநாட்டும். * நம்முடைய ஒவ்வொரு அந்தரங்கத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்தால் போதும். அந்த விநாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும். - காந்திஜி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.