யார் சிறந்த அறிவாளி?
பிப்ரவரி 28,2013,
11:02  IST
எழுத்தின் அளவு:

* சொர்க்கமும் நரகமும் நம் மனதிற்கு உள்ளே தான் இருக்கிறது.
* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். கடவுள் ஒருவரே என்றென்றும் நிலையானவர்.
* ஒருபோதும் கர்வம் கொள்ளக்கூடாது. உங்களைக் காட்டிலும் சிறந்தவர்கள் உலகில் பலர் இருக்கின்றனர். பிறரைக் கீழானவர்களாக கருதுபவன் தானே கீழ்நிலை அடைவான்.
* எவனொருவன் பிறரை சிறிதளவு கூட அவமதிக்கவில்லையோ, அவனே சிறந்த அறிவாளி.
* கோபத்தினால் பிறரைக் குறை கூறித் திரிபவர்கள் தங்களின் முட்டாள்தனத்தை உணர்வதில்லை.
* மனத்தூய்மை மிக்க நல்லவர்களோடு உறவாடுங்கள். அதன் மூலம் நாமும் தூய்மை பெற முடியும்.
* உறுதியான மனோதிடம், தூயபக்தி, வைராக்ய சிந்தனை கொண்டவர்கள் கடவுளைக் காணும் பேறு பெறுகிறார்கள்.
* மனதில் வெறுப்புணர்விற்கு இடம் கொடுக்காதீர்கள். பிறர் மீது வெறுப்பு காட்டினால் கடவுளே நம்மை வெறுத்து விடுவார்.
- சாந்தானந்தர்

Advertisement
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சாந்தானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X