* வீடும் செல்வங்களும் தந்தையரின் வாரிசுச் சொத்து. புத்தியுள்ள மனைவியோ ஆண்டவரிடமிருந்து கிடைப்பது.
* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.
* பூலோகத்தில் உள்ள பொக்கிஷங்களைச் சேர்த்துக் கிடக்க வேண்டாம். அங்கே அந்தும் தூரும் அரித்துத் திருடர்களும் கன்னமிட்டுத் திருடுகிறார்கள்.
* சிலரது நற்காரியங்கள் முன்னதாகவே பிரபலம் அடைகின்றன. அப்படி ஆகாதவைகளை என்றென்றைக்குமே மறைத்து வைத்து விட முடியாது.
* பிறர் உங்களுக்கு எதெதையெல்லாம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொள்கிறீர்களோவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
* சர்வேஸ்வரனுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆனால், மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் வெறுத்து ஒதுக்குவார்கள்.
* இப்பொழுது நிலைபெற்றிருப்பவை விசுவாசம், நம்பிக்கை, தர்மம். இம்மூன்றினும் மகத்தானது தர்மமே.
- பைபிள் பொன்மொழிகள்