* கோபத்திலிருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம். * தேவையுள்ளவன் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை. * தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகி பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள். * மனிதர்கள் உங்கள் நற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவை அவர்கள் போற்றட்டும். * எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப்பேச்சில் ஒரு பலனும் இல்லை. * சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது. எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள். - பைபிள் பொன்மொழிகள்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.