* சிறைக்கு வழிநடத்துபவன் சிறைக்கு உள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்படுவான்.
* நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.
* எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எதெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்குரியதோ அவற்றைச் சிந்தித்துக் கொண்டிருங்கள்.
* எதைச் சாப்பிடுவோம் எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில், இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.
* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.
- பைபிள் பொன்மொழிகள்