* அகத்தூய்மையுடையோர்க்கு எல்லாமே தூய்மை. கெட்டழிந்தவர்களுக்கும் நம்பாதவர்களுக்குமோ எதுவுமே தூய்மை இல்லை. * அகங்காரம் வரும் போது அதற்குப் பின்னே அவமானமும் வந்து சேரும். * அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்துபோகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்க படுவான். * தன்னிலே அசுத்தம் என்று எதுவுமில்லை. ஆனால் எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத் தான் அது அசுத்தமாயிருக்கிறது. * கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மனஅமைதியும் உள்ள ஜீவனைத்தான் கொடுத்திருக்கிறார். * ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். * பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாக இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாளுபவனே சிறந்தவன். - பைபிள் பொன்மொழிகள்
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.