* பணத்தை விட அறிவு உயர்ந்தது என்று அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால், அறிவை விட ஒழுக்கமே சிறந்தது. * ஒருவன் கற்ற கல்வியை தராசின் ஒரு தட்டிலும், மனத்தூய்மை, உண்மையை இரண்டாவது தட்டிலும் வைத்துப் பார்த்தால், இரண்டாவது தட்டே தாழ்ந்து நிற்கும். * ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வி, தீமை செய்வதற்கான தகுதியை ஒருவருக்கு வழங்கி விடும். * சட்டத்தால் மட்டுமே யாரையும் திருத்தி விட முடியாது. முழுமையான மனமாற்றமே திருந்துவதற்கான ஒரே வழி. * சந்தேகப்படுவது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுகிறவர்கள் நீண்டநாள் உலகில் நிலைத்திருக்க முடியாது. * குறிக்கோள் இல்லாத வாழ்வு, நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. ஒழுக்கம் இல்லாத மனிதனால் எந்த ஒரு குறிக்கோளையும் எட்ட முடியாது. * கடவுளிடம் அளவற்ற நம்பிக்கையும், பயபக்தியும் இருக்கும் ஒருவனே வாழ்வில் சபதம் மேற்கொள்ள தகுதி படைத்தவன். - காந்திஜி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.