* நடக்க வேண்டிய வழியில் குழந்தையை பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.
* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.
* பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.
* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்து போவான்.
* அசட்டுத்தனமான வீண்கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.
* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.
* கொலை செய்யாதே. களவு செய்யாதே. பொய்சாட்சி சொல்லாதே. வஞ்சனை செய்யாதே. உன் தந்தையையும் தாயையும் பெருமைப்படுத்து.
- பைபிள் பொன்மொழிகள்