* நாம் பல காரியங்களில் தவறு செய்கிறோம். ஆனால், வார்த்தையில் தவறு செய்யாதவனே பரிபூர்ணமான மனிதனாவான். அவன் தன் உடல் முழுதையும் கடிவாளத்தில் வைத்திருக்க முடியும்.
* திடீர் என்று எந்த மனிதன் மீதும் கை வைத்து விடாதே. மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் தூயவனாகக் காப்பாற்றிக் கொள்.
* எவரும் பின் தொடரும் முன்பே தீயவர்கள் பறந்தோடுகிறார்கள். ஆனால், நேர்மையாளர்களோ, இளஞ்சிங்கம் போல துணிச்சல் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
* கேளுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள். கண்டடைவீர்கள். தட்டுங்கள். உங்களுக்கு திறக்கப்படும்.
* அன்னமும் ஆடையுமிருந்தால் அதுவே போதுமென்ற மனதிருப்தி அடைவோமாக.
- பைபிள் பொன்மொழிகள்