* உன் சகோதரன் உனக்கு எதிராக ஏதாவது செய்திருப்பானேயானால், நீ போய் அவன் தனித்திருக்கையில் அவனுடைய தவறைக் கண்டித்துச் சொல்.
* புரிந்து கொள்பவனுக்கு ஞானம் என்பது அவன் எதிரேயே இருக்கிறது. முட்டாளின் கண்களோ உலகின் கடைசிக் கோடி வரை தேடியலையும்.
* உன்னுடைய கண் தீமையானதாயிருந்தாலோ, உன் உடல் முழுதும் இருள் உள்ளதாயிருக்கும். ஆதலின், உன்னுள்ளே இருக்கும் ஒளியே இருளாயிருந்தால் இருட்டு எவ்வளவு பெரியதாயிருக்கும்?
* நிலைத்து நிற்பதாக நினைப்பவன், கீழே விழாதபடி கவனமாயிருக்கட்டும்.
* உடைந்த உள்ளம் உடையவர்களுக்குக் கர்த்தர் வெகு சமீபத்தில் இருக்கிறார்.
* கணவர்களே மனைவியைக் காதலியுங்கள். அவர்களுக்கு மாறாகக் கசப்பாயிராதீர்கள்.
- பைபிள் பொன்மொழிகள்