* கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும் என்கிறார் புத்தர். பதிலுக்குப் பதில் என்று கோபப்பட்டால் எதிரிக்கும் மட்டுமில்லாமல், நமக்குமே தீங்கு செய்து கொள்கிறோம்.
* இடைவிடாத பயிற்சி செய்தால் யாரும் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியும். மனதில் அன்பு மலர்ந்து விட்டால் கோபம் தானாக மறைந்து விடும்.
* குற்றம் செய்வதில் தான் அவமானம் இருக்கிறதே தவிர, அதற்காக தண்டனை பெறுவதில் இல்லை.
* சந்தேகம் கொள்வது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுவதும் நீண்டநாள் நிலைத்திருக்க முடியாது.
* சபதம் செய்து விட்டு அதை மீறுவதை விட, சபதம் செய்யாமல் இருப்பது நல்லது. சபதம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கிறது.
* மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவது தவறு என்பதை விட பாவச்செயலாகும்.
- காந்திஜி