* கவலைப்படுவதால் நீங்கள் காணும் லாபம் இருதயக்கோளாறு, பய உணர்ச்சி, நரம்புத்தளர்ச்சி ஆகியவை தான். கவலையை விட்டு, பிரச்னைக்கு எப்படி தீர்வு காணலாம் என யோசித்தால் பிரச்னையும் தீரும், உடலும் கெடாது.
* கையில் பணம் இல்லாவிட்டால், நீங்கள் முழுவதும் இழந்தது போல் உணர்கிறீர்கள். உங்கள் வேலை களை பறிப்பதாயிருந்தாலும், அதை ஒழுங்காகச் செய்தால், உங்கள் பணம் உங்களைத் தேடி வரும்.
* பணம் அதிகாரத்தைப் பெறும் ஆசையை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும், பணம் பெற்றவர்கள் மற்றவர்களின் துன்பங்களுக்கு இரங்காத நிலைக்குத் தள்ளி விடுகிறது.
* உங்கள் மீது நீங்களே தீர்ப்பளிக்க முடியாது. ஆண்டவனின் தீர்ப்பு அல்லது தலைவிதியே உங்களை மாற்ற முடியும்.
- பரமஹம்ச யோகானந்தர்