* அன்பு ஒருபோதும் "வேண்டும்' என்று கேட்பதில்லை. அது எப்போதும் கொடுக்கவே செய்யும். * உண்மையான அன்பு தியாகம் செய்யும். பலனை எதிர்பார்க்காது. அன்பை விட அதிக பலம் வாய்ந்ததும், பணிவுடையதும் வேறு எதுவும் கிடையாது. * பாவங்கள் எல்லாம் அந்தரங்கமாகவே செய்யப்படுகின்றன. நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் கடவுள் அறிவார் என்பதை உணர்ந்து விட்டால் அந்தக்கணமே பாவம் செய்வதை விட்டு விடுவோம். * ரகசியமாகச் செய்யும் அனைத்துமே பாவம் தான். கடவுளின் கண்ணில் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது. * கணவனுக்கும் மனைவிக்கும் இடையே களங்கமற்ற நிஜமான அன்பு இருக்க வேண்டும். வேறெந்த அன்பை காட்டிலும் இதுவே கடவுளுக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல வல்லது. - காந்திஜி
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.