* மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது.
* ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத காலத்தை வீணாக்கும் எண்ணம் மறைந்து விடும்.
* எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும்.
* நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை.
* உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.
- காந்திஜி