* ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்க்கை நிம்மதியான வாழ்வுக்கு வழி வகுக்கும்.
* நாம் சிந்திப்பது நமக்காக மட்டுமே. ஆனால், ஞானிகள் சிந்திப்பது உலகத்திற்காக.
* படிப்பினால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தினால் உண்டாகும் அறிவு அதிக பலனளிக்கும்.
* வாழ்வில் வளர்ச்சி ஏற்பட விரும்பினால் நல்லவர்களைத் தேடிச் சென்று பழகுங்கள்.
* பணத்தின் மீது அளவுகடந்த ஆசை வைப்பது கூடாது. பணம் சேருமிடத்தில் ஒழுக்கம் இருப்பதில்லை.
- வாரியார்