* மலை புயலுக்கு வீழ்ந்து போவதில்லை. அறிவாளி புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.
* யாரையும் தாழ்வாகக் கருதாதீர்கள். தான் என்ற செருக்கு ஒருவனைத் தாழ்த்தும்.
* அறிவாளிகளுடன் உறவாடினால், நன்மைக்கான கதவு திறந்து விடும்.
* ஆயிரம் வீண் வார்த்தைகளை பேசுவதை விட, பயனுள்ள ஒற்றைச் சொல்லால் நன்மை உண்டாகும்.
* வாய் பொய் சொல்லலாம். ஆனால், கண்கள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.
* கேட்டதை எல்லாம் நம்பத் தேவையில்லை. தீர விசாரித்து உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.
-புத்தர்