* அதிகாரத்தால் மற்றவரை அடக்காதீர்கள். அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்.
* நல்ல வழியில் நிர்வகிக்கப்பட்ட மனம் மனிதனைச் செம்மைப்படுத்தும். அதனால் வரும் நன்மை எல்லையற்றது.
* அறிஞர்களின் உறவை நாடிச் செல்லுங்கள். அது உயர்வுக்கு வழிவகுக்கும்.
* பொறாமையை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். எப்போதும் அமைதியில் திளைப்பீர்கள்.
* பேராசையில் சிக்க வேண்டாம். உங்களை நீங்களே விழிப்புடன் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
-புத்தர்