* கவலைப்படுவதால் நேரம் வீணாகிறது. பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆக்கப்பூர்வமான வழியில் சிந்தியுங்கள்.
* மனக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது.
* மனம் நல்லதை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால், கண்ணில் காணும் தீமையில் கூட நன்மை வெளிப்படத் தொடங்கும்.
* பகைவரிடமும் அன்பு காட்டுங்கள். உங்களுக்கு புதிய உறவுக்காரர் விரைவில் கிடைக்க வாய்ப்பு வரும்.
* நம் எண்ணத்தைப் பொறுத்தே வாழ்வில் நமக்கான சூழ்நிலைகள் உருவாகின்றன.
-பரமஹம்ச யோகானந்தர்