* அதிகாரத்தால் யாரையும் பணிய வைக்க வேண்டாம். அன்பாகச் சொன்னால் எதிர்பார்த்ததை விட பணி சிறக்கும்.
* அருகில் இருப்போர் மகிழ்ச்சியாக இருந்தால், அதில் பங்கு கொள்ளுங்கள். துன்பத்திலும் இதை கடைபிடியுங்கள்.
* எதற்காகவும், யாரைப் பற்றியும் வதந்தி பரப்பாதீர்கள். இது மோசமான பின்விளைவை ஏற்படுத்தி விடும்.
* தீய விஷயங்கள் உங்கள் கவனத்திற்கு வந்தாலும் செவி சாய்க்காமல் அங்கிருந்து ஒதுங்கி விடுங்கள்.
* வீண் பேச்சால் தேவையற்ற சிரமம் வரும் என்பதை உணர்ந்து அதைத் தவிருங்கள்.
-புத்தர்