* தற்புகழ்ச்சி இல்லாத ஒருவனின் பெயரைக் கடவுள் மூவுலகிற்கும் தெரியப்படுத்தி மகிழ்ச்சியடைவார்.
* வயது முதிர்ந்த காலத்தில் பட இருக்கும் துன்பத்தைப் பற்றி சிந்திப்பவன், வாழ்வில் தடுமாறத் தேவையிருக்காது.
* நாம் இதுவரை முன்னேறாமல் இருப்பதற்கு, இதுவரை நல்லவர்களோடு பழகவில்லை என்பதே காரணம்.
* எதிரி மீது கோபம் கொள்ள வேண்டாம். வேண்டாதவரும் வாழ வேண்டும் என நினைப்பது தான் நம் பண்பாடு.
* படிப்பினால் வரும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவு மேலானது.
-வாரியார்