* நல்லவர்கள் சொல்லும் குறைகளைத் திருத்திக் கொள்ளவும், மூடர்கள் சொல்லும் குறையை புறக்கணிக்கவும் பழகுங்கள்.
* மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் லட்சியம் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மிருகநிலைக்கு தாழ்ந்து விடுவோம்.
* படிப்பினால் ஏற்படும் அறிவை விட, அனுபவத்தால் உண்டாகும் அறிவு அதிக பயனைக் கொடுக்கும்.
* வெயில் அதிகமாக இருந்தால் மழை வர வாய்ப்பு உண்டாகும். அதுபோல, அநீதி அதிகமாகும் போது பூமியில் மகான்கள் பிறக்கின்றனர்.
- வாரியார்